Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரிசி ஆலைகளுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு : கருணாநிதி அறிவிப்பு!

Advertiesment
அரிசி ஆலைகளுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு : கருணாநிதி அறிவிப்பு!
, வியாழன், 27 நவம்பர் 2008 (05:46 IST)
மின்வெட்டிலிருந்து அரிசி ஆலைகளுக்கு விலக்க முத‌ல்வ‌ர் கருணாநிதி உ‌த்தர‌வி‌‌ட்டு‌ள்ளா‌ர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி‌க்‌குறிப்பில், "அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கடந்த 25ஆ‌ம் தேதி அன்று உணவு அமைச்சர் எ.வ.வேலு நடத்திய கூட்டத்தில் பங்கேற்று முக்கிய உணவுப் பொருளான அரிசியை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் அத்தியாவசிய சேவையை செய்து வரும் அரிசி ஆலைகளுக்கு மின் வெட்டிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்ததுடன், வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலையை ரூ.3 வரை குறைப்பதாகவும் உறுதியளித்து நேற்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையினை ஏற்று, அனைத்து அரிசி ஆலைகளுக்கும் மின் வெட்டிலிருந்து விலக்களிக்க முத‌ல்வ‌ரகருணாநிதி ஆணையிட்டார்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil