Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல‌த்த மழை : தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இ‌ன்று விடுமுறை!

Advertiesment
பல‌த்த மழை : தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இ‌ன்று விடுமுறை!
, செவ்வாய், 25 நவம்பர் 2008 (00:23 IST)
வ‌ங்ககட‌லி‌ல் உருவா‌கி உ‌ள்ள குறை‌ந்த கா‌ற்றழு‌த்த தா‌ழ்‌வு ‌நிலை காரணமாக த‌மிழக‌ம், புதுவை‌யி‌ல் கட‌ந்த 5 நா‌ட்களாக பல‌த்த மழை பெ‌ய்து வரு‌‌கிறது. இத‌ன் காரணமாக த‌மிழக‌த்‌தி‌‌ல் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை அற‌ி‌வி‌க்க‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.

வங்க கடலில் இலங்கை கடற்கரையில் இருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதா‌ல் கடந்த 5 நாட்களாக த‌‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது.

இத‌ன் காரணமாக ஆறுக‌ளி‌ல் வெ‌ள்ள‌ம் பெரு‌க்கெடு‌த்து ஓடு‌கிறது. நெ‌ல்லை‌யி‌ல் குறு‌க்கு‌த்துறை முருக‌ன் கோ‌வி‌‌‌ல் ம‌ண்டப‌ங்க‌ள் ‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌கியு‌ள்ளன‌.

மழை காரணமாக த‌‌ஞ்சாவூ‌ர், பெர‌ம்பலூ‌ர், ‌கடலூ‌ர், விழு‌ப்புர‌ம், அ‌ரியலூ‌ர், ‌திருவாரூ‌ர், புது‌க்கோ‌ட்டை, மதுரை, ‌தி‌ண்டு‌க்க‌ல், நாகை, தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு இ‌ன்று ‌விடுமுறை ‌விட‌ப்படுவதாக மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil