Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டக் கல்லூரி மோதல் : மாணவர் சரண்!

Advertiesment
சட்டக் கல்லூரி மோதல் : மாணவர் சரண்!
, செவ்வாய், 18 நவம்பர் 2008 (00:15 IST)
சட்டக் கல்லூரி மாணவ‌ர்க‌ள் மோதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த ரவிவர்மா என்ற மாணவர் நீதிமன்றத்தில் ‌சரணடைந்துள்ளார். மேலும் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்!

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கடந்த 12 ஆம் தேதி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டக் கல்லூரி மோதல் தொடர்பாக தேடப்பட்டவர்களில் ரவிவர்மா என்ற மாணவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ‌வியாழ‌க்‌கிழமை சரணடைந்தார். சரணடைந்த மாணவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி கிள்ளிவளவன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, பொள்ளாச்சியைச் சேர்ந்த அசோக் என்ற மாணவரையும், சிவகிரியைச் சேர்ந்த முருகேசன் என்ற மாணவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக இதுவரை 18 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil