Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு: ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை!

Advertiesment
ஈரோடு: ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை!
, திங்கள், 17 நவம்பர் 2008 (12:31 IST)
ஈரோடு ஜவுளிக் கடை அதிபர் வீட்டிலிருந்து 57 பவுன் தங்கநகை, ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளைடியத்து சென்றுவிட்டனர்.

கோட்டை முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா, ஜவுளி ஏற்றுமதி செய்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமையன்று குடும்பத்தினருடன் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பிற்கு சுற்றுலா சென்றுவிட்டார்.

நேற்றுகாலை அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து, ராஜாவிற்கு தகவல் கொடுத்தனர்.

ராஜா வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 57 பவுன் தங்கநகை மற்றும் ரொக்கம் ரூ.15 லட்சம் கொள்ளை போயிருப்பதை அறிந்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil