Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த தபால் அலுவலர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்!

- ஈரோடு வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த தபால் அலுவலர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்!
, சனி, 15 நவம்பர் 2008 (12:52 IST)
ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று தபால் அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்திந்திய தபால் அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் ஈரோடு கோட்ட சங்க தொடக்கவிழா நடைபெற்றது. முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் ஸ்டாலின்சற்குணம் தலைமை தாங்கினார். மண்டல செயலர் மயில்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தொ.மு.ச. பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான குப்புசாமி கலந்துகொண்டு பேசினார்.

ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டங்கள், வைப்புநிதி திட்டங்களை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதிக்குழுவில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளை நீக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil