Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

Advertiesment
லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
ஈரோடு: ஈரோடு அருகே ரூ.300 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு அருகே உள்ளது அரச்சலூர். இங்குள்ள திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அரச்சலூரில் குடியிருந்து வருகிறார்.

இவர் குடிபெயர்ச்சி சான்றிதழ் கேட்டு அரச்சலூர் வருவாய் ஆய்வாளர் அன்புமணியிடம் விண்ணப்பித்தார். இந்த சான்றிதழ் வழங்க அன்புமணி ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து மகாலிங்கம் ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌க்கு தகவல் கொடுத்தார். இதன்படி மகாலிங்கம் வருவாய் ஆய்வாளர் அன்புமணியிடம் ரூ.300 லஞ்சம் கொடுக்கும்போது கைது செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil