Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரைக்கு இ‌ன்று சிறப்பு ரயில்!

Advertiesment
மதுரைக்கு இ‌ன்று சிறப்பு ரயில்!
, வெள்ளி, 7 நவம்பர் 2008 (09:30 IST)
செ‌ன்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இ‌ன்று இரவு சிறப்பு ரயில் இய‌க்க‌ப்பட உ‌ள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல், செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (எ‌ண். 0631) இன்று இரவு 11.55 மணிக்கு புறப்ப‌ட்டு மறுநா‌ள் காலை 10 ம‌ணி‌க்கு மதுரையை செ‌ன்றடையு‌ம

இ‌ந்த ர‌யி‌ல் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விரு‌த்தாசலம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இத‌ற்கான மு‌ன்பதிவு இ‌ன்று (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) காலை தொட‌ங்கு‌கிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil