Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு மாணவ‌ர் விடுதிகளில் உணவுப் படியை உயர்த்த வேண்டும் : மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கோ‌ரி‌க்கை!

Advertiesment
அரசு மாணவ‌ர் விடுதிகளில் உணவுப் படியை உயர்த்த வேண்டும் : மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் கோ‌ரி‌க்கை!
, வியாழன், 6 நவம்பர் 2008 (10:26 IST)
தமிழக அரசின் மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாநிலச் செயலர் என்.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "தமிழகத்தில் அரசு மாணவர் விடுதிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்கள், தங்களின் உணவுப்படியை உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக, கடந்த ஆண்டு முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன் பிறகும் உணவுப்படி உயர்த்தப் படாததால், விடுதி மாணவர்கள் சென்னையில் பேரணி நடத்தினார்கள்.

பிறகு சட்டமன்றக் கூட்டத்தொடரில், மாதாந்திர உணவுப்படி ரூ.50 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இப்போது விலை உயர்வால் மாணவர்களின் உணவுத்தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உணவு‌ப்படியை உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன், உணவுப்படியை மேலும் அதிகரிக்கவேண்டும்" எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil