Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரத‌ம்!

இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து சினிமா தொழிலாளர்கள் உண்ணாவிரத‌ம்!
, புதன், 5 நவம்பர் 2008 (14:46 IST)
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்ய‌ப்படுவதகண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தின‌ர்.

செ‌ன்னசாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டூடியோவில் இ‌ந்உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌மகாலை 8 மணிக்கு தொட‌ங்‌கி மாலை 4 வரநட‌ந்தது.

உ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌த்த‌ி‌ற்கபெப்சி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் தொடங்கி வைத்தார். பெப்‌ி யூனியனில் உள்ள அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத பந்தலில் 21ம் நூற்றாண்டின் ஹிட்லர், இடியமின், ராஜபக்சே, சென்னீரில் ஈழம் கண்ணீரில் தமிழினம், வெட்ட வெட்ட தளிர்க்கும், அருகம்புல், கொல்ல கொல்ல பிறக்கும் தமிழினம், மத்திய அரசே தலையிட்டு போரை நிறுத்து என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் தொங்க விடப்பட்டிருந்தன.

ஈழத்தமிழர் பிணங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது போன்ற டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

இலங்கஅதிபரராஜபக்சேவகண்டித்தும், இலங்கை‌தமிழர்களுக்கஆதரவதெரிவித்துமவிளம்பபதாகைகளபந்தலிலவைக்கப்பட்டிருந்தது.

உ‌ண்ணா‌விரத‌த்தை தென்னிந்திநடிகரசங்கததலைவரசரத்குமார் பங்கேற்று முடித்தவை‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil