Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 ஆ‌ம் தேதி பா.ம.க. செய‌ற்குழு கூ‌ட்ட‌ம்!

Advertiesment
15 ஆ‌ம் தேதி பா.ம.க. செய‌ற்குழு கூ‌ட்ட‌ம்!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (17:22 IST)
பா.ம.க. தலைமை செய‌ற்குழு கூ‌ட்ட‌ம் வரு‌‌கிற 15ஆ‌ம் தே‌தி தைலாபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள அர‌சிய‌ல் ப‌யிலர‌ங்க வளாக‌‌த்‌தி‌ல் நடைபெறு‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கோ.க.ம‌ணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் வருகிற 15ஆ‌ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் பா.ம.க. அரசியல் பயிலரங்க வளாகத்தில் நடைபெறுகிறது.

செயற்குழு கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சி தலைவர் கோ.க.மணி தலைமை தாங்குகிறார். மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள் அன்புமணி, வேலு மற்றும் பா.ம.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், மாநிலத் துணைத்தலைவர், துணைப் பொதுச்செயலாளர், மாநில அணித்தலைவர், செயலாளர், மாவட்டத்தலைவர், செயலாளர், பொருளாளர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் அழைப்பு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எ‌ன்று கோ.க.ம‌ணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil