Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன்!

Advertiesment
100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன்!
, புதன், 16 ஜூலை 2008 (09:19 IST)
தமிழகத்தில் 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூ‌றினா‌ர்.

தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகை‌யி‌ல், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 24 ‌விழு‌க்காடு வாக்கு வங்கி உள்ளது. அ.இ.அ.தி.மு.க.வுக்கு 24 முதல் 26 ‌விழு‌க்காடு வாக்கு வங்கி உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு 6 முதல் 8 ‌விழு‌க்காடு வாக்குகள் உண்டு.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தைத் தவிர மற்ற இடங்களில் நிலையான வாக்கு வங்கி கிடையாது.

இதனால் நிலையான வாக்கு வங்கியைப் பெற விடுதலைச் சிறுத்தைகள் 100 இடங்களிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் நிலையான வாக்கு வங்கியை நிர்ணயிக்க முடியும்.

2011-ல் தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு தனிச் சின்னம் கிடைக்கும். 2006 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அங்கீகாரம் பெற்றிருக்க முடியும் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil