Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு அருகே விதை உற்பத்தி நிலையங்கள் வேலைநிறுத்தம்!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஈரோடு அருகே விதை உற்பத்தி நிலையங்கள் வேலைநிறுத்தம்!
, புதன், 11 ஜூன் 2008 (13:26 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விதை உற்பத்தி நிலையங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையை எதிர்த்து விதை உறபத்தி நிலையங்களை சேர்ந்தவர்கள் நேற்றும், இன்றும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் 23 தனியார் விதை நெல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நெல்விதை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த விதைநெல் உற்பத்தி நிலையங்களில் போலி விதை உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சில விதைநெல் உற்பத்தி நிலையங்களில் உள்ள விதைகளை பறிமுதல் செய்யப்பட்டு சில நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை கண்டித்து ஈரோடு மாவட்ட விதை உற்பத்தி நிலையங்கள் நேற்றும், இன்றும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil