Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 7‌ம் தே‌தி ஆட்டோக்கள் ஓடாது!

Advertiesment
தமிழகத்தில் 7‌ம் தே‌தி ஆட்டோக்கள் ஓடாது!
, வியாழன், 5 ஜூன் 2008 (16:39 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை‌க் கண்டித்து வரும் ஜூன் 7-ம் தேதி தமிழகம் முழுதும் ஆட்டோக்கள் ஓடாது என்று தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம். மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

சி.ஐ.டி.யு. பொதுச் செயலர் எஸ். சவுந்தரராஜன், மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், மற்றும் பிற தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மு‌ன்னதாக, த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் 7 ஆ‌ம் தே‌தி முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌‌ம் நடைபெறு‌ம் எ‌ன்று க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி அ‌றி‌வி‌‌த்து‌ள்ளது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil