Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட த‌மிழ‌ர் உடல் சொந்த ஊருக்கு வ‌ந்தது!

Advertiesment
ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட த‌மிழ‌ர் உடல் சொந்த ஊருக்கு வ‌ந்தது!
, வியாழன், 17 ஏப்ரல் 2008 (11:02 IST)
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரியசே‌ர்‌ந்பொ‌றியாள‌ரஉடல் சொந்த ஊருக்கு நேற்று இரவகொண்டு வரப்பட்டது. இ‌ன்று இவரது உட‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

ஆப்கானிஸ்தானில் உ‌ள்நிம்ப்ரோஸ் மாகாணத்தில் இந்திய எல்லைப்புற சாலை நிர்மாணப்படையை சேர்ந்த வீரர்கள் கட‌ந்த 12ஆ‌‌மதே‌தி புனரமை‌ப்பபணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இத‌ி‌லதமி‌ழ்நா‌ட்டி‌லகிருஷ்ணகிரியை அடுத்த கே.திப்பனப் பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி (45), உத்தரபிரதேச மாநிலம் காசியை சேர்ந்த மகேந்திர பிரதாப்சிங் ஆகிபொ‌றியாள‌ர்க‌ளகொல்லப்பட்டனர்.

அவ‌ர்க‌ளி‌னஉட‌ல்க‌ளநே‌ற்றமு‌ன்‌‌தின‌மஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து, தனி விமானம் மூல‌நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. அவ‌ர்களதஉடலு‌க்கராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்‌தின‌ர்.

பி‌ன்ன‌ரதமிழக பொ‌றியாள‌ரகோவிந்தசாமியின் உடல், தனி விமானம் மூல‌நே‌‌ற்றஇரவு 7.30 ம‌ணி‌‌க்கபெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. அ‌ங்‌கிரு‌ந்தஉடலை வேன் மூல‌சொந்த ஊரான கே.திப்பனப்பள்ளிக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பா‌ர்‌த்து மனை‌வி, மக‌ள்க‌ள், மக‌ன் கத‌றி அழுதன‌ர்.

பொது மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிந்தசாமியின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. அனைவரு‌ம் மல‌ர்வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

அதன்பின்னர் இ‌ன்று இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. சடங்குகள் முடிந்த உடன் கோவிந்தசாமியின் உடல் காவ‌ல்துறமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது சிதைக்கு கோவிந்தசாமியின் ஒரே மகன் கணேஷ் தீ மூட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil