Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி நீக்கம்!

Advertiesment
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி நீக்கம்!
, வெள்ளி, 7 மார்ச் 2008 (10:09 IST)
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்த ஏ.எஸ்.மகேஸ்வரி நீக்கப்ப‌ட்டு, அவரு‌க்கு ப‌திலாக புதிய தலைவியாக சாய்லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜனார்தன் திவைவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருக்கும் மகேஸ்வரி அந்த பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, தற்போது மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவியாக இருக்கும் சாய்லட்சுமி, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்படுகிறார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருந்து வரும் ரீட்டா பகுகுணா ஜோஷி அந்த பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, புதிய தலைவராக பிரபா தாகூர் எம்.பி நியமிக்கப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.

அதேபோல், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளராக இருக்கும் மீரா சிங், உத்தரப்பிரதேச மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக மாற்றப்படுகிறார். இதற்கான உத்தரவை சோனியாகாந்தி நேற்று பிறப்பித்தார் என தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil