Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோ‌ட்டி‌ல் பெண்ணை ‌மிர‌ட்டி 35 பவுன் நகை கொள்ளை!

வேலு‌ச்சா‌மி

Advertiesment
ஈரோ‌ட்டி‌ல் பெண்ணை ‌மிர‌ட்டி 35 பவுன் நகை கொள்ளை!
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (16:07 IST)
ஈரோட்டில் பெண்ணை மிரட்டி 35 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பையும், அதிரிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு நகர் பகுதியில் உள்ளது மாணிக்கம்பாளையம். இங்குள்ள ஹவுஸிங் யூனிட் அருகே பழனியப்பா நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(42). நிதிநிறுவனம், ‌நில புரோக்கராக உள்ளார். இவரது மனைவி நிர்மலா (28). நேற்று மதியம் 3.15 மணிக்கு நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அ‌ப்போது இரு ச‌க்கர வாகன‌த்‌தி‌ல் வ‌ந்த நான்கு பேர் ‌முகமூடி அ‌ணி‌ந்தபடி சுற்றுச்சுவ‌‌ரி‌ல் ஏறிக் குதித்து ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் புகுந்தனர்.

இதை பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த ‌நி‌ர்மலா அல‌றினா‌ர். அ‌‌ப்போது, நிர்மலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொ‌ள்ளைய‌ர்க‌ள் அவரது வாய்க்குள் துணியை திணித்து, கைகளை பின்புறமாக கட்டினர். ‌பி‌ன்ன‌ர் பீரோவில் இருந்த 35 பவுன், ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு நிர்மலாவின் கழுத்தில் இருந்த தாலி செ‌யினை அறுக்க முயன்றனர். நிர்மலா, கொ‌ள்ளைய‌ர்க‌ளிட‌ம் கெஞ்‌சியதா‌ல் தாலி செ‌யினை அறுக்காம‌ல் ‌வி‌ட்டன‌ர்.

பி‌ன்ன‌ர் கொ‌ள்ளைய‌ர்க‌ள் அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌‌பின‌ர். நிர்மலாவின் சத்தம் கேட்டு அ‌க்க‌ம் ப‌க்க‌த்‌தின‌‌ர் அவரை மீட்னர். இது குறித்து தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் சோனல்மிஸ்ரா, காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கை ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil