Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக‌த்‌தி‌ல் விடுதலைப் புலிக‌ள் ஊடுருவல் இல்லை : காவ‌ல்துறை தலைவ‌ர்!

Advertiesment
தமிழக‌த்‌தி‌ல் விடுதலைப் புலிக‌ள் ஊடுருவல் இல்லை : காவ‌ல்துறை தலைவ‌ர்!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (20:09 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் ஊடுருவ‌ல் எதுவு‌ம் இ‌ல்லை எ‌ன்று‌ம் பு‌லிக‌ள் ஊடுருவலை தடு‌க்க கடலோர பகு‌திக‌ளி‌ல் பாதுகா‌ப்பு ‌வி‌ரி‌வு‌ப்படு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் த‌மிழக காவ‌ல்துறை தலைவ‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் காவ‌ல் துறை அதிகாரிகள் தங்குவதற்கான விடுதி திறப்பு விழா‌வி‌ல் தமிழக காவ‌ல் துறை தலைவ‌ர் ராஜேந்திரன் கலந்து கொ‌ண்டு விடுதியை திறந்து வைத்தார். பின்னர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி‌ அ‌‌ளி‌த்அவ‌ரகூ‌றியதாவது:

தமிழக‌த்‌தி‌ல் ச‌ட்ட‌ம் ஒழு‌ங்கு ந‌ல்ல முறை‌யி‌ல் உ‌ள்ளது. விடுதலைப் புலிகள் ஊடுருவல் எது‌வு‌ம் இல்லை. பு‌லிக‌ளி‌ன் ஊடுருவலை‌ தடு‌க்க கடலோர பகுதிகளில் கடலோர காவ‌ல் படை‌யின‌ர் ‌‌‌வி‌ழி‌ப்புண‌ர்வுட‌ன் செய‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

தமிழ‌த்‌தி‌ல் ரவுடிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவது கிடையாது. எ‌ந்த க‌ட்‌சியாக இருந்தாலும் அவர்கள் ரவுடி எ‌ன்று தெ‌ரி‌ந்தா‌ல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ள டெலிபோன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சுய விளம்பரத்திற்காகவே இந்த புகார் கூறப்பட்டு உள்ளது எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil