Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் தீவிரவாதம் வேரூன்றிவிடக்கூடாது: கா‌ங்‌கிர‌ஸ்

Advertiesment
தமிழகத்தில் தீவிரவாதம் வேரூன்றிவிடக்கூடாது: கா‌ங்‌கிர‌ஸ்
, வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:05 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌தீ‌விரவாத‌ம் வேரூ‌ன்‌றி‌விட‌க்கூடாது எ‌ன்று ‌த‌மிழக ச‌ட்டசபை‌‌யி‌ல் கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி கொறடாவு‌ம், எ‌ம்.எ‌ல்.ஏ.வுமான ‌பீ‌ட்ட‌ர் அ‌ல்போ‌ன்‌ஸ் ‌வ‌லியு‌று‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தமிழக சட்டசபையில் இன்று ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசினா‌ர். அப்போது அவர் கூ‌றியதாவது:

விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அவர்களை எதிர்ப்பதற்கு எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி கொலை மட்டுமே காரணம் அல்ல. காங்கிரசின் வீர வரலாறே எங்கள் தலைவர்கள் கொல்லப்படுவதுதான். அந்த மரணங்களுக்காக நாங்கள் யாரையும் வெறுக்கவில்லை.

ஆனால் தமிழகத்தில் தீவிரவாதம் வேரூன்றிவிடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கமாகும். இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். விஷ நாகம் போல ஊடுருவும் தீவிரவாதம் நம்மை கடிக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இ‌வ்வாறு அ‌வ‌ர் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil