Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌திரு‌ச்‌சி‌யி‌ல் மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திகளை மு.க.‌ஸ்டா‌லி‌ன் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்!

Advertiesment
‌திரு‌ச்‌சி‌யி‌ல் மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திகளை மு.க.‌ஸ்டா‌லி‌ன் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்!
, செவ்வாய், 25 டிசம்பர் 2007 (13:52 IST)
த‌‌மிழக‌த்‌தி‌ல் கட‌ந்த வார‌ம் பெ‌ய்த கன மழையா‌ல் ‌திரு‌ச்‌சி‌யி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திகளை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்.

மழை வெ‌ள்ள‌த்தா‌ல் மோசமாக‌ப் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட உறையூ‌ர், ராம‌‌லி‌ங்கநக‌ர், சோமரச‌ம்பே‌ட்டை, க‌ல்லணை போ‌ன்ற பகு‌திக‌ளி‌ல் அவ‌ர் செ‌ன்றபோது, பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்க‌ள் க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க த‌ங்க‌ள் குறைகளை‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெ‌ள்ள‌த்‌தி‌ல் ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌ம், ப‌யி‌ர்களை இழ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் முத‌ல்க‌ட்ட ‌நிவாரண உத‌விகளை வழ‌ங்‌கிய ‌ஸ்டா‌லி‌ன், ‌மேலு‌ம் ‌நி‌தியுத‌வி ‌விரை‌வி‌ல் ‌கிடை‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

அ‌ப்போது அவருடன் போக்குவரத்துதுறை அமைச்சர் கே.என்.நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ், திருச்சி ஆ‌ட்‌சிய‌ர் ஆசிஷ் வச்சானி, மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ. க்கள் அன்பில் பெரியசாமி, சவுந்தரராஜன், கே.என்.சேகரன், ராணி உள்பட பலர் உடன் இரு‌ந்தன‌ர்.


Share this Story:

Follow Webdunia tamil