Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண் குழந்தையின் தோஷம் தீர பிச்சை எடுக்க வேண்டும்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Advertiesment
ஆண் குழந்தையின் தோஷம் தீர பிச்சை எடுக்க வேண்டும்
, செவ்வாய், 25 டிசம்பர் 2007 (11:06 IST)
தங்கள் வீட்டில் உள்ள ஆண் குழந்தைக்கு கிரக தோஷம் ஏற்பட்டுள்ளது. இந்த கிரக தோஷத்தை தடுக்க பெண்கள் பிச்சை எடுக்க வேண்டும் என எழுந்த புரளியால் கோபியில் நேற்று பரப்பரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை சில பெண்கள் வீடு வீடாக சென்று, பிச்சையாக ஒரு ரூபாய் போடும்படி கேட்டு கொண்டு இருந்தனர். அந்த பகுதிகளில் கூட்டம் கூட்டமாக நின்று மக்கள் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்க‌ளிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் மகன் மட்டும் இருந்தால், அந்த குழந்தைக்கு கிரக சூழ்நிலைகள் மற்றும் நேரம் சரியில்லை என வதந்தி பரப்பினர்.

இதைபோக்க சனி, ராகு, கேது, சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், சந்திரன், குரு ஆகிய ஒன்பது கிரங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரமாக ஒரே ஒரு ஆண் குழந்தையை பெற்ற தாய் ஒன்பது வீடுகளுக்கு சென்று பிச்சை எடுத்து அதை ஏதாவது ஒரு கோயில் உண்டியலில் போட வேண்டும் என வதந்தி வேகமாக பரவியது.

இதனாலேயே நேற்று கோபியில் சில பெண்கள் வீடு வீடாக சென்று ஒரு ரூபாய் பிச்சை கேட்டனர். கிடைத்த பணத்தை கோயில் உண்டியலில் போட்டு பரிகாரம் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil