Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீ‌ட்டுச் சுவ‌ர் இடிந்து விழு‌ந்து 4 பே‌ர் ப‌லி!

Advertiesment
வீ‌ட்டுச் சுவ‌ர் இடிந்து விழு‌ந்து 4 பே‌ர் ப‌லி!

Webdunia

, புதன், 19 டிசம்பர் 2007 (14:58 IST)
பல‌த்த மழை காரணமாக ‌திரு‌ச்‌சி‌யி‌ல் ‌வீ‌ட்டு சுவ‌ர் இடி‌ந்து வ‌ிழு‌ந்து ஒரே குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்‌த 4 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

திரு‌ச்‌சியை சே‌ர்‌ந்தவ‌ர் ஜான‌கிராம‌ன் (43), இவரது மனை‌வி ஜோ‌திபா‌ய் (36), மக‌ன்க‌ள் மகே‌ஷ் (17), ம‌ணிக‌ண்ட‌ன் (10) ஆ‌கியோ‌ர் ‌வீ‌‌ட்டி‌ல் இ‌ன்று அ‌திகாலை தூ‌ங்‌கி கொ‌ண்டிரு‌‌ந்தன‌ர். அ‌ப்போது பல‌‌த்த மழை காரணமாக ‌வீ‌ட்டு சுவ‌ர் ஈர‌ப்பதமாக இரு‌ந்ததா‌ல் இடி‌ந்து இவ‌ர்க‌ள் ம‌ீது ‌விழு‌ந்தது. இ‌தி‌ல் நா‌ன்கு பேரு‌ம் உட‌ல் நசு‌ங்‌கி அந்த இட‌த்‌திலேயே ப‌ரிதாபமாக உய‌ி‌ரிழ‌ந்தன‌ர்.

இது கு‌றி‌த்து அ‌க்க‌ம் ப‌க்க‌த்‌தின‌ர் ‌தீயணை‌ப்பு ‌வீ‌‌ர‌ர்களு‌க்கு தகவ‌ல் கொடு‌த்தன‌ர். அவ‌ர்க‌ள் ‌விரை‌ந்து வ‌ந்து உடலை கை‌ப்ப‌ற்‌றி ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ‌திரு‌ச்‌சி அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

இ‌ந்த ச‌ம்பவ‌‌ம் கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil