Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.ஏ.ராஜா மீது குண்டு வீச்சு: காயத்துடன் தப்பினார்!

Advertiesment
எஸ்.ஏ.ராஜா மீது குண்டு வீச்சு: காயத்துடன் தப்பினார்!

Webdunia

, புதன், 12 டிசம்பர் 2007 (13:00 IST)
மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ஆலடி அருணா கொலை‌க்குப் பழ‌ி‌க்கு‌ப் ப‌ழியாக வட‌க்க‌ன் குள‌த்தை ச‌ே‌ர்‌ந்த ‌க‌ல்‌வி ‌நிறுவன‌ர் எ‌ஸ்.ஏ.ராஜா ‌செ‌ன்ற கா‌ரி‌ல் ம‌ர்ம கு‌ம்ப‌ல் ஒ‌ன்று வெடிகு‌ண்டு ‌வீ‌சிய தா‌க்குத‌ல் நட‌த்‌திய‌தி‌ல் அவ‌ர் லோசான காய‌த்துட‌ன் உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர்.

நெல்லை மாவட்டம், வடக்கன்குள‌த்தை சே‌‌ர்‌ந்தவ‌ர் எஸ்.ஏ.ராஜா. இவர் வடக்கன்குளம், காவல்கிணறு, ஆலங்குளம் ஆகிய இடங்களில் பொ‌றி‌யி‌ய‌ல், மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்.

இவ‌ர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு த‌ற்போது ‌ பிணை‌ய விடுதலையில் ‌உ‌ள்ளா‌ர். இ‌‌ன்று வட‌க்க‌‌ன் குள‌ம்- ராதாபுர‌ம் சாலை‌யி‌ல் கா‌‌‌ரி‌ல் எ‌ஸ்.ஏ.ராஜா செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது அவரது காரை ‌பி‌ன்தொட‌ர்‌ந்த 7 பே‌‌ர் கொ‌ண்ட கு‌ம்ப‌ல் ஒ‌ன்று எ‌ஸ்.ஏ.ராஜா கா‌ர் ‌மீது வெடிகு‌ண்டை ‌வீ‌சியது.

இத‌ி‌ல், எ‌ஸ்.ஏ.ராஜா, கா‌ர் ஓ‌ட்டுன‌ர் ஆ‌கியோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர். ‌இதையடு‌த்து அ‌ந்த கு‌ம்ப‌ல் அ‌ங்‌கிரு‌ந்து கா‌‌ரி‌ல் த‌ப்‌பியது. ஆலடி அருணா கொலை‌யி‌ல் ப‌ழி‌க்கு‌‌ப்ப‌ழியாக இ‌ந்த ச‌ம்பவ‌ம் நட‌ந்து‌ள்ளதாக தெ‌ரி‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil