Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த மழைபெய்யும்: வானிலை ஆராய்ச்சி மையம்!

Advertiesment
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த மழைபெய்யும்: வானிலை ஆராய்ச்சி மையம்!

Webdunia

, வியாழன், 8 நவம்பர் 2007 (11:48 IST)
''தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே பலத்த மழைபெய்யும்'' என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை இப்போது கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென்மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழைபெய்யும். தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் சில இடங்களில் மழைபெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எ‌ன்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil