Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Advertiesment
கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia

, புதன், 24 அக்டோபர் 2007 (17:49 IST)
தென் மேற்கு வங்கக்கடலில் தமிழகம் மற்றும் இலங்கை கரைக்கு அப்பால் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இ‌ன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 2 நாள்களுக்கு மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil