Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 கிலோ வெடிமருந்துகள் கடத்திய 2 பேர் கைது!

Advertiesment
500 கிலோ வெடிமருந்துகள் கடத்திய 2 பேர் கைது!

Webdunia

, வியாழன், 18 அக்டோபர் 2007 (20:14 IST)
அனுமதியின்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிலோ வெடிமருந்துகளை ஜெயங்கொண்டம் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே இன்று காலை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் தலையில் ஒரு மூட்டையை சுமந்து சென்றவரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் வெடிமருந்து இருப்பது தெரியவந்தது. அதற்குரிய அனுமதி எதுவும் அந்த நபரிடம் இல்லை.

இது தொடர்பாக அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பாப்பாக்குடியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த 500 கி.கி. வெடி மருந்துகளை கைப்பற்றினர்.

Share this Story:

Follow Webdunia tamil