Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழு அடைப்பிற்கு தடை

Advertiesment
முழு அடைப்பிற்கு தடை

Webdunia

, ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (14:54 IST)
சேது சமுத்திரத் திட்டத்தை வேகமாக நிறைவேற்றக் கோரி திமுக கூட்டணி நாளை விடுத்திருந்த முழு அடைப்பிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் முழு அடைப்பிற்கு தடை விதிக்க மறுத்ததை அடுத்து அஇஅதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டை இன்று விசாரித்த அகர்வால் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் உரிமையைவிட, பொதுமக்களின் நலனே முக்கியமானது என்பதால் முழு அடைப்புப் போராட்டத்திற்கு தடை விதிப்பதாக தங்களுடைய உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து நாளை நடைபெறுவதாக இந்த முழு அடைப்பிற்கு பதிலாக, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக திமுக கூட்டணி அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil