Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Advertiesment
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia

, செவ்வாய், 17 ஜூலை 2007 (19:22 IST)
சென்னை தியாகராய நகர் தொகுதி மேம்பாட்டு பணியை தடுக்கும் தமிழக அரசை கண்டித்து வருகிற 20 ஆம் தேதி அதிமுக சார்பில் சென்னையில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கலைராஜன் தொகுதி மக்களுக்காக பணியாற்றிட சட்டமன்ற அலவலகக் கட்டிடம் கட்டித் தராமல் திமுக அரசு பழிவாங்கி வருவதாக கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகியும் இந்த அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது என்றும், சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி இதுவரையில் பயன்படுத்தப்படாமலேயே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், வருகின்ற 20-ந்தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் மாபரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil