Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு பேருந்துகள் மோதல் : 7 பேர் பலி 23 பேர் படுகாயம்

Advertiesment
அரசு பேருந்துகள் மோதல் : 7 பேர் பலி 23 பேர் படுகாயம்

Webdunia

, புதன், 11 ஜூலை 2007 (10:56 IST)
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு அரசு பேருதுகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவையில் இருந்து சென்னையை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை ஏழு மணி அளவில் பேருந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே சென்ற போது, சென்னையிலிருந்து ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

எதிர்பாராத இந்த கோர விபத்தில் அரசு பேருந்துகளின் ஓட்டுனர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil