Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறுவை பிரசவம் விவகாரம்: மருத்துவ தம்பதியினர் கைது

Advertiesment
அறுவை பிரசவம் விவகாரம்: மருத்துவ தம்பதியினர் கைது

Webdunia

, திங்கள், 25 ஜூன் 2007 (16:34 IST)
மணப்பாறையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர் தம்பதியினர் மகன் ஒரு பெண்ணுக்கு அறுவை பிரசவம் செய்த விவகாரம் தொடர்பாக மருத்துவ தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மருத்துவ தம்பதினர் முருகேசன் , காந்திமதி ஆகியோர் தனியார் மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் திலீபன் குமார். கின்னஸ் சாதனைக்காக நீலா என்ற பெண்ணுக்கு திலீபன் குமார் பிரசவ அறுவை சிகிச்சை செய்தார்.

16 வயது சிறுவன் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் மருத்துவ துறையில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதைத்தொடர்ந்து மருத்துவர் முருகேசன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, இன்று காலை திண்டுக்கல்லில் உள்ள மருத்துவர் முருகேசனின் வீட்டுக்கு சென்ற காவல் துறையினர் முருகேசனையும், அவரது மனைவி மருத்துவர் காந்திமதியையும் கைது செய்தனர்.

தலைமறைவான மருத்துவர் தம்பதியினரின் மகன் திலீபன் குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil