Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேது சமுத்திரம் 2008 டிச. முடியும்

Advertiesment
சேது சமுத்திரம் 2008 டிச. முடியும்

Webdunia

, திங்கள், 18 ஜூன் 2007 (14:37 IST)
சேது சமுத்திரத் திட்டம் வரும் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடையும் என்று கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆ. பாலு தெரிவித்துள்ளார்.

பல்லடத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எம்.பி. சுவாமிநாதனுடன் பார்வையிட்ட டி.ஆர். பாலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, சேது சமுத்திரக் கால்வாய் பணிக்கான் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் இதர பணிகளுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சேது சமுத்திரப் பணிகள் வரும் 2008 டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்துவிடும் என்று கூறினார்.

மேலும் கூடலூர், கோவை வழியாக நாகப்பட்டிம் - மைசூர் நெடுஞ்சாலைப் பணிகள் ரூ.2500 கோடியில் நடந்து வருகிறது. இதுவும் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil