Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 2 பேர் பலி

Advertiesment
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ: 2 பேர் பலி

Webdunia

, செவ்வாய், 12 ஜூன் 2007 (12:09 IST)
சிவகாசி அருகே புதூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே உள்ள புதூரில் பல தனியார் பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை ஒரு பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எதிர்பாராத இந்த விபத்தில், பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil