Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகாசியில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

Advertiesment
சிவகாசியில் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

Webdunia

சிவகாசியில் தேநீர் கடையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகாசியில் உள்ள தேனீர் கடை ஒன்றில் இன்று திடீரென திப்பிடித்தது. தீயை அணைக்க அப்பகுதி மக்கள் பெரிதும் முயற்சி செய்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் கடையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

எதிர்பாராத இந்த கோர விபத்தில் கடையில் இருந்த 2 பேர் உள்ளிட்ட, அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற தலைமை காவலர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தேநீர் கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil