Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்மொழி விருது: மத்திய அரசு ஒப்புதல்

Advertiesment
செம்மொழி விருது: மத்திய அரசு ஒப்புதல்

Webdunia

செம்மொழி சார்பில் 2 சர்வதேச விருது வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் கருணாநிதி நேற்று சென்னை திரும்பினார். இரவு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு போட்டியளித்த அவர், மத்திய மனித ஆற்றல் துறை துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குடன் நடந்த பேச்சு வார்த்தை மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்றார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், மத்திய அரசின் சார்பில் சென்னையில் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க திட்டக் கமிஷன் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் திருவள்ளுவர், தொல்காப்பியர் பெயரில் விருதுகள் வழங்குவதோடு,சர்வதேச அளவில் 2 தமிழறிஞர்களைக் கண்டறிந்து விருது வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil