Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரசாத், ராபின்சிங் தொடர்கின்றனர்

பிரசாத், ராபின்சிங் தொடர்கின்றனர்
, வியாழன், 20 மார்ச் 2008 (11:11 IST)
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ராபின் சிங்கும், பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத்தும் நீடிப்பார்கள் என்று பி.சி.சி.ஐ. செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்

ஆனால் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய தொடர்களுக்கு உதவிப் பயிற்சியாளராக இருந்த லால்சந்த் ராஜ்புட் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. இந்திய அணிப் பயிற்சியாளராக தற்போது கேரி கர்ஸ்டன் பொறுப்பெற்றுள்ளதால், ராஜ்புட் தேவையில்லை என்று நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.

வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது குறித்து தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்தவுடன் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

பிராசாத், ராபின்சிங் ஆகியோர் இந்திய பிரிமியர் லீக் அணிகளுக்கும் பயிற்சி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதால் அவர்களின் பணிக்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இரண்டு அணிகளுக்கு ஒரே நேரத்தில் இருவரும் பயிற்சியாளராக தொடர முடியாது என்று நிரஞ்சன் ஷா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil