Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைதானத்தில் வசை: தடைக்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை

மைதானத்தில் வசை: தடைக்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை
, வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (11:02 IST)
மைதானத்தில் வீரர்கள் ஒருவரையொருவர் வசைபாடும் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க வசையை தடை செய்யுமாறு இந்தியா கட்டுப்பாட்டு வாரியம் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை வைக்கவுள்ளது.

அடுத்த வாரம் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. தலைமைச் செயலதிகா‌ரிகள் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்பபோவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

"வசை பாடுதல் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தேவையில்லை, அது ஆட்டத்திற்கு நல்லதல்ல" இவ்வாறு நிரஞ்சன் ஷா பிபிசி ஸ்போர்ட்ஸ் நேர் காணலில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கும் இந்த விவகாரத்தை தடை செய்தால்தான் ஆட்டம் தடையின்றி நடைபெறும், எனவே ஐ.சி.சி. தங்களது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தான் நம்புபுவதாக நிரஞ்சன் ஷா மேலும் கூறுகையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil