Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோமாவில் வீழ்ந்தார் தென்கொரிய குத்துச் சண்டை வீரர்!

கோமாவில் வீழ்ந்தார் தென்கொரிய குத்துச் சண்டை வீரர்!
, வியாழன், 27 டிசம்பர் 2007 (14:19 IST)
தென்கொரிய குத்துச் சண்டை வீரர் சோய் யோய்-சாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தோனேஷிய குத்துச் சண்டை வீரர் ஹேரி அமோல் என்பவருடன் மோதிய ஆட்டத்திற்கு பிறகு மயங்கி விழுந்தார்.

12 சுற்று குத்துச் சண்டையில் 12வது சுற்றில் தென்கொரிய குத்துச் சண்டை வீரர் வீழ்த்தப்பட்டார்.

உடனடியாக அவர் மயக்க நிலைக்கு சென்றதால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் கோமாவில் விழுந்து விட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலையில் அடிபட்டிருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகக் கூறும் மருத்துவமனை அதிகாரிகள், அவர் பிழைத்தாலும் குத்துச் சண்டையில் இனி பங்கேற்பது கடினமே என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil