Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிக்கி போயேவிற்கு டெல்லி காவல் அழைப்பாணை

Advertiesment
நிக்கி போயேவிற்கு டெல்லி காவல் அழைப்பாணை
, வியாழன், 6 டிசம்பர் 2007 (13:43 IST)
மறைந்த தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோனியே தொடர்புடைய கிரிக்கெட் சூதாட்ட வழக்கு கு‌றி‌த்து ‌விசா‌ரி‌க்க தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் நிக்கி போயேவிற்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ஆனால் எந்த தேதியில் அவர் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடவில்லை என டெல்லி காவல்துறை குற்றவியல் பிரிவு தலைமை அதிகாரி மது திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருது ஓய்வு பெற்ற நிக்கி போயே தற்போது சண்டிகாரில் நடைபெற்று வரும் இந்திய கிரிக்கெட் லீக் ஆட்டங்களில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

கிரிக்கெட் சூதாட்ட வழக்கு தொடர்பாக 2006ம் ஆண்டு ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டிகளின் போது மற்றொரு வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் டெல்லி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.

அப்போது நிக்கி போயே இந்தியாவிற்கு வரவில்லை என்பதால் தற்போது விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil