Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஃப்ரீடி, காம்பீருக்கு அபராதம்

Advertiesment
அஃப்ரீடி, காம்பீருக்கு அபராதம்
, வியாழன், 15 நவம்பர் 2007 (11:02 IST)
கான்பூரில் நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அஃப்ரீடியும் இந்திய வீரர் காம்பீரும் நடத்தை விதிகளை மீறியதற்காக ஐசிசி அவர்கள் இருவருக்கும் அபராதம் விதித்துள்ளது.

கான்பூர் ஒரு நாள் போட்டியில் அஃப்ரீடி பந்தை காம்பீர் பவுண்டரிக்கு அடித்ததையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதி கொண்டனர். மேலும் சில வார்த்தைகளையும் பறிமாறிக் கொண்டனர்.

இந்த விவகாரம் ஐசிசி ஆட்ட நடுவர் ரோஷான் மஹானாமா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அஃப்ரீடிக்கு அவரது ஆட்ட ஊதியத்தில் 95 சதவீதமும், காம்பீருக்கு 65 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil