Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷோயப்-ஆசிப் இடையே கைகலப்பு : பாக். அதிர்ச்சி

Advertiesment
ஷோயப்-ஆசிப் இடையே கைகலப்பு : பாக். அதிர்ச்சி

Webdunia

, வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (11:27 IST)
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷொயப் அக்தர் மற்றும் மொகமத் ஆசிப் ஆகியோரிடையே கைகலப்பு ஏற்பட்டு அதில் ஆசிப் காயமடைந்ததாக தெரிகிறது.

இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது உண்மையே என்றும் இதில் மட்டையால் தாக்கப்பட்டதால் ஆசிப் இடது தொடையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக அணியுடன் சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் அஷன் மாலிக் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தற்போது இது குறித்து விவரிக்க விரும்பவில்லை என்றும் அஷன் மாலிக் கூறியுள்ளார்.

கென்யாவில் 4 நாடுகள் இருபதுக்கு20 போட்டியில் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் ஜோகன்னஸ்பர்கில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்து வீரர்கள் அனைவரும் ஓய்வறைக்கு திரும்பியவுடன் ஷோயப்-ஆசிப் இடையே தகராறு மூண்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil