Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணீந்தர் சிங் தற்கொலை முயற்சி ?

மணீந்தர் சிங் தற்கொலை முயற்சி ?

Webdunia

, சனி, 9 ஜூன் 2007 (11:35 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைகள் அறுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொகைன் என்னும் ஒரு வகையான போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை மணீந்தர் சிங் கைகள் இரண்டும் அறுக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் கிழக்கு டெல்லியில் உள்ள சன்டிமுகுண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

மணீந்தர் சிங் விபத்திற்குள்ளானரா ? அல்லது தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் தெரிய வில்லை என்றும், ஆனால் ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டி விட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil