Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கச்சா எண்ணெய்: இந்தியா கோரிக்கையை ஏற்றது சவுதி

Advertiesment
கச்சா எண்ணெய்: இந்தியா கோரிக்கையை ஏற்றது சவுதி
ரியாத் , செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (18:43 IST)
இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி ஒப்புக் கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண்டு நாள் பயணமாக சவுதி சென்றுள்ளார்.அங்கு சவுதி அரசர் அப்துல்லாவை சந்தித்தார்.

30 நிமிடங்கள் தொடர்ந்த நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அத்துடன் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் உள்பட எல்லா உதவிகளும் அளிப்பதாக சவுதி அரசர் வாக்குறுதி அளித்ததாக சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி தெரிவித்தார்.


Share this Story:

Follow Webdunia tamil