Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை மராத்தான் ஓட்டம் துவக்கம்: 38 ஆயிரம் பேர் பங்கேற்பு

Advertiesment
மும்பை மராத்தான் ஓட்டம் துவக்கம்: 38 ஆயிரம் பேர் பங்கேற்பு
மும்பை , ஞாயிறு, 17 ஜனவரி 2010 (10:26 IST)
மும்பை மராத்தான் ஓட்டம் இன்று காலை பலத்த பாதுகாப்புடன் சத்ரபதி ரயில் நிலையத்தில் இருந்து துவங்கியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட 38 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 42 கி.மீ தூரம் கொண்ட இந்த மராத்தான் ஓட்டத்தில், அயல்நாட்டினர், ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள், மாணவர்கள், இதர பிரிவினர் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு திறக்கப்பட்ட பந்த்ரா-வோர்லி கடல்வழிச் சாலை வழியாக சென்று விட்டு மீண்டும் சத்ரபதி சிவாஜி நிலையத்தை வந்தடையும் இந்த மும்பை மராத்தான் ஓட்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அக்சய் குமார், குல் பனாங், ராகுல் போஸ், ஜான் ஆப்ரகாம், ரெய்ட்ஸ் தேஷ்முக், குல்ஷான் குரோவர், டினா அம்பானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, அப்னாலயா என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி திரட்டுவதற்காக மும்பை மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil