Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூர்காலேண்ட் மசோதா கொண்டுவர வலியுறுத்தல் - ஜிஜேஎம்

கூர்காலேண்ட் மசோதா கொண்டுவர வலியுறுத்தல் - ஜிஜேஎம்
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (17:57 IST)
தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பிரித்து கூர்காலேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க ஏதுவாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும்போது, மத்திய அரசு எங்களது உரிமையுடன் கூடிய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்றும், நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜி.ஜே.எம் பொதுச் செயலாளர் ரோஷன் கிரி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil