Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் மேம்பாலம் சரிந்து 5 பேர் பலி

Advertiesment
டெல்லியில் மேம்பாலம் சரிந்து 5 பேர் பலி
புதுடெல்லி , ஞாயிறு, 12 ஜூலை 2009 (10:15 IST)
புதுடெல்லியின் தெற்குப் பகுதியில் கட்டப்பட்டு வந்த பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்ததில் 5 கட்டுமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லஜ்பத் நகர் பகுதிக்கு அருகே உள்ள தம்ருத்பூரில் இயங்கி வரும் லேடி ஸ்ரீராம் கல்லூரிக்கு அருகே கட்டப்பட்டு வந்த டெல்லி மெட்ரோ (பறக்கும் ரயில்) மேம்பாலம் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக சரிந்தது.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 3 கட்டுமானப் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் உயிருக்கு போராடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும், இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிருடன் மீட்க முடியவில்லை. இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil