ஜம்மு- காஷ்மீரில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அடர்ந்த வனப் பகுதியில் உள்ள அந்த மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எல்லையோர மாவட்டமான ராஜூரியில் கண்டி என்ற இடத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் காவலர்களும், ராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதிலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசுப் பேச்சாளர் தெரிவித்தார்.
பிஸ்டல் ஒன்று, சீன கையெறி குண்டுகள் 5, ஏ.கே.47 துப்பாக்கி குண்டுகள், ஆர்.பி.ஜி. குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடி பொருட்களில் அடக்கம் என்றார் அவர்.