Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓவியர் ஹுசைன் மீதான வழக்கு தள்ளுபடி!

Advertiesment
ஓவியர் ஹுசைன் மீதான வழக்கு தள்ளுபடி!
, வியாழன், 8 மே 2008 (14:07 IST)
இந்துக் பெண் தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததாக ஓவியர் ஹுசைன் மீது தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹுசைன் மீது 3 மா‌நிலங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் இந்த குற்றச்சா‌ற்று அடிப்படையற்றது என்றார்.

இது பல்வேறு பார்வைகள் தொடர்பான விவகாரம், இ‌தி‌ல் கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு போதுமான அடிப்படைகள் இல்லை என்று கூ‌றிய ‌நீ‌திப‌தி வழ‌க்கை‌த் தள்ளுபடி செய்தார்.

சர்ச்சைக்குரிய ஓவியங்களால் எழுந்த ஆர்‌ப்பாட்டங்கள் காரணமாக ஓவியர் ஹுசைன் நாட்டை விட்டு வெளியேறி தற்போது துபாயில் வசித்து வருகிறார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil