Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் பேருந்து விபத்தில் 14 பேர் பலி!

Advertiesment
காஷ்மீர் பேருந்து விபத்தில் 14 பேர் பலி!
, திங்கள், 21 ஏப்ரல் 2008 (16:07 IST)
ஸ்ரீநகர் அருகே பயணிகள் பேருந்து ஒன்று க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து பள்ளத்தில் உருண்டதில் அதில் பயணம் செய்த 14 பேர் ப‌லியா‌யின‌ர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர்.

சுமார் 45 பயணிகளுடன் இந்த பேருந்து மோசமான மலைப் பாதையில் ஸ்ரீநகர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது பானிஹால் அருகே பள்ளத்தில் உருண்டு‌ள்ளது.

எனினும் இந்த விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை என்று‌ம், விசாரணைக்கு உத்தரவிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாகவு‌ம் காவ‌ல்துறை கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில மலைப் பகுதி சாலைகள் பராமரிப்பு ச‌ரி‌யி‌ல்லை எ‌ன்பதா‌ல் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil