Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2014-ல் நிலவிற்கு மனிதன் : இஸ்ரோ திட்டம்!

Advertiesment
2014-ல் நிலவிற்கு மனிதன் : இஸ்ரோ திட்டம்!

Webdunia

, வியாழன், 27 செப்டம்பர் 2007 (18:32 IST)
2014 ஆம் ஆண்டிற்குள் நிலவிற்கு மனிதனை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்திட்டத்திற்கு நவீனத் தொழில்நுட்பங்களும், மனிதவளமும் அதிக அளவில் தேவைப்படுகிறது என்றார்.

நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ கடந்த ஆண்டே தொடங்கி விட்டது. அதன் அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இத்திட்டத்திற்கு பிற நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களின் ஒத்துழைப்பையும் நாடியுள்ளோம் என்றும் நாயர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil