ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனின் முக்கிய கூட்டாளி உள்பட மேலும் 2 பேரை நேட்டோ படைகள் பிடித்துள்ளனர். ஆனால் அவனது பெயர் விவரங்களை வெளியிட நேட்டோ படைகள் மறுத்துவிட்டது.
ஒசாமா பில்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கா அவரது கூட்டாளிகள், தாலிபான் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இந்தநிலையில் சர்வதேச பாதுகாப்பு படையினர் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் முக்கிய இடமான உஸ்பெஸ்கிதான் எல்லையில் உள்ள பகாத் மாநிலம் நகிரா- ஷகிரா என்ற இடத்தில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
அப்போது அங்கு மறைந்து இருந்த பின்லேடனின் முக்கிய கூட்டாளி உள்பட மேலும் 2 பேரை நேட்டோ படைகள் பிடித்தன. ஆனால் அவனது பெயர் விவரங்களை வெளியிட நேட்டோ படைகள் மறுத்துவிட்டது.
பாதுகாப்பு படையினர் அவனிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வந்தது தெரியவந்தது.