Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவை எதிரியாய் கருதும் போக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும்: நவாஸ் ஷெரீஃப்

Advertiesment
இந்தியா
, செவ்வாய், 17 மே 2011 (13:32 IST)
இந்தியாவைத் தங்களது பெரும் எதிரியாகக் கருதும் போக்கை பாகிஸ்தான் அரசும், இராணுவமும் கை விட வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வழிகளை ஆராய வேண்டு்ம் என்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தவும், முன்னெற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு ஷெரீஃப் கூறியுள்ளார். அமெரிக்க அதிரடிப் படையினர் ஒசாமா பின் லேடனை கொன்றது போன்ற நடவடிக்கையெடுத்தால் தக்க பதிலடி தருவோம் என்று பாகிஸ்தான் இராணுவம் பேசிவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவின் அவசியத்தை ஷெரீஃப் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1999ஆம் ஆண்டில் கார்கில் போர் வெடித்ததற்கான சூழலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நவாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil